Monday, June 12, 2017

தராவீஹ் 18 ம் நாள்





ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை நம் வேதத்திற்கு வாரிசாக ஆக்கினோம்.அவர்களில் தனக்குத்தானே அநியாயம் செய்து கொண்டவரும் நடுநிலையானவரும் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு நன்மைகளில் முந்திச் செல்பவரும் உண்டு.அது தான் மிகப்பெரும் அருளாகும். {35 ; 32}

Sunday, June 11, 2017

தராவீஹ் 17 ம் நாள்



இன்று ரமலான் 17 ம் நாள்.கண்ணியம் நிறைந்த பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்.இஸ்லாமிய வரலாற்றின் முதல் வெற்றிப் போரான பத்ரு நிகழ்ந்த நாள்.

Friday, June 9, 2017

தராவீஹ் 16 ம் நாள்




( أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون
நாங்கள் ஈமான் கொண்டோம் என்று சொல்வதினால் மட்டும் சோதனை செய்யப்படாத நிலையில் விட்டு விடப்படுவார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா? {29 ; 2}


ஈமான் கொண்டு விட்டால் போதும் எங்களுக்கு எந்த சோதனையும் வராது,வரக்கூடாது என்று எண்ணுவது தவறு.மக்களுக்கு அவர்களது ஈமானுக்கு தகுந்தவாறு சோதனைகளும் சிரமங்களும் வருவது இயல்பு என்று இந்த வசனத்தின் வழியே அல்லாஹ் கூறுகிறான்.
{3 ; 142}, {2;214} ஆகிய வசனங்களும் இதே கருத்தைத்தான் தாங்கி நிற்கிறது.

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)

وقال مقاتل : نزلت في مهجع مولى عمر بن الخطاب كان أول قتيل من المسلمين يوم بدر ; رماه عامر بن الحضرمي بسهم فقتله فقال النبي صلى الله عليه وسلم يومئذ : سيد الشهداء مهجع وهو أول من يدعى إلى باب الجنة من هذه الأمة فجزع عليه أبواه وامرأته فنزلت :قرطبي
பத்ர் களத்தில் உமர் ரலி அவர்களின் அடிமையான மிஹ்ஜஃ என்ற ஸஹாபி தான் முதன் முதலாக ஷஹீதாக்கப்பட்டார்.நபி ஸல் அவர்கள், அவர் ஷஹீதுகளின் தலைவர். சுவனத்தின் வாசலில் என் உம்மத்தில் அவர் தான் முதலாவதாக அழைக்கப்படுவார் என்று சொன்னார்கள். ஆனால் அவரது மரணம் குறித்து அவரது பெற்றோரும் மனைவியும் அதிர்ச்சியடைந்தார்கள்.ஈமானை ஏற்ற மிஹ்ஜஃ அவர்களுக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே என்று வருத்த மடைந்தார்கள்.அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. {குர்துபி}

இவ்வுலக வாழ்க்கை என்பது சோதனைகளும் சிரமங்களும் நிறைந்தது. அதுவும் ஈமான் கொண்டவர்களுக்கு, அதில் உறுதியாக இருப்பவர்களுக்கு சோதனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

அல்லாஹ் இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்.

அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும்,சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் சோதிக்கின்றான். {2 ; 155

இந்த வசனத்தில் கூட அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவன் கொடுக்கும் சோதனைகளின் விதங்களை நமக்கு உணர்த்துகிறான்

குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்தி லிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான்.சிலருக்கு குழந்தையை தராமல் சோதிக்கிறான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக் கொள்கிறான்.

இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை.

சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே

ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை நபிமார்களும் இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களைஅல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறை வேற்றினார்கள்.
فعن عائشة -رضي الله تعالى عنها- قالت: سألتُ رسول الله -صلى الله عليه وسلم- عن الطاعون فأخبرني أنه: ((عذاب يبعثه الله
 على من يشاء، وأن الله جعله رحمة للمؤمنين، ليس من أحدٍ يقعُ الطاعونُ فيمكث في بلده صابراً محتسباً، يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر شهيد))([1])، رواه البخاري.
நான் நபி (ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ்தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு "ஷஹீது" என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

وقوله : ( أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ) استفهام إنكار ، ومعناه : أن الله سبحانه وتعالى
 لا بد أن يبتلي عباده المؤمنين بحسب ما عندهم من الإيمان ، كما جاء في الحديث الصحيح : " أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ، ثم الأمثل فالأمثل ، يبتلى الرجل على حسب دينه ، فإن كان في دينه صلابة زيد في البلاء " . وهذه الآية كقوله : ( أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ) [ آل عمران : 142 ] ، ومثلها في سورة" براءة " وقال في البقرة :( أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب ) [ البقرة : 214 ] ; ولهذا قال هاهنا 
மக்களிலேயே அதிகம் சோதனைக்குள்ளாக்கப் பட்டவர்கள் நபிமார்கள். பின்பு ஸாலிஹீன்கள்.ஒருவர் அவரின் மார்க்கத்தின் ஈடுபாட்டின் அளவு அவருக்கு சோதனை வரும்.ஒருவர் மார்க்கத்தில் உறுதியாக இருந்தால் சோதனையும் அதிகமாகும்.

நபி ஸல் அவர்கள் அதிகம் சோதனைகளை சந்தித்தார்கள். எனவே அந்த நபியின் பிரியம் கூட நமக்கு சோதனைகளை ஏற்படுத்தும்.
قال رَجلٌ لِلنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّمَ يا رسولَ اللهِ واللهِ إنِّي لَأُحِبُّك فقال انْظُرْ ماذا تقولُ قال واللهِ إنِّي لَأُحِبُّك فقال انْظُرْ ماذا تَقولُ قال واللهِ إِنِّي لَأُحِبُّك ثلاثَ مَرَّاتٍ فقال إن كُنتَ تُحِبُّنِي فأَعِدَّ لِلْفَقرِ تِجْفافًا فإنَّ الفقرَ أسرعُ إلى مَن يُحِبُّنِي من السَّيلِ إلى مُنْتهَاهُ

الراوي: عبدالله بن مغفل المحدث: الترمذي     - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 2350
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் உங்களை நேசிக்கிறேன் என்றார்.அபோது நபி ஸல் அவர்கள் நீ சொல்வதை யோசித்து சொல் என்றார்கள்.அவர் மறுபடியும் அல்லாஹ்வின் ஆணையாக நான் உங்களை நேசிக்கிறேன் என்றார்.இவ்வாறு மூன்று முறை கூறினார்.அதற்கு நபி ஸல் அவர்கள் நீ என்னை நேசிப்பது உண்மையானால் நீ ஏழ்மைக்கு தயாராகிக் கொள் என்றார்கள். {திர்மிதி}

எனவே சோதனைகள் என்பது யதார்த்தம்.சோதனைகள் இல்லாமல் வாழ முடியாது.சோதனைகளை விட்டும் யாரும் தப்ப முடியாது.

அந்த சோதனையின் போது பொறுமை கொள்ள வேண்டும்.அந்த சோதனையிலும் அல்லாஹ்வை திருப்தி கொள்ள வேண்டும்.அவர் தான் உண்மையான வெற்றியாளர்.அந்த உணர்வு,அந்த தன்மை எல்லாருக்கும் வராது.அந்த பொறுமையும் திருப்தியும் இருக்கிறதா என்பதைத் தான் இறைவன் பார்க்கிறான். உண்மையான ஈமான் சோதனையின் போது தான் வெளிப்படும்.

أحد الحُجَّاج يطوف بالبيت ويقول: " يا رب، هل أنت راضٍ عني ؟ "، كان وراءه الإمام الشافعي، فقال له: " يا
 هذا، هل أنت راضٍ عن الله حتَّى يرضى عنك ؟ " فقال: " يرحمك الله من أنت ؟، قال: " أنا محمدٌ بن إدريس الشافعي "، قال: " كيف أرضى عنه، وأنا أتمنَّى رضاه، ما هذا الكلام ؟ "، قال: " يا هذا، إذا كان سرورك بالنِقمة كسرورك بالنعمة فقد رضيت عن الله “.
ஒருவர் தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது யாஅல்லாஹ் என்னை திருப்தி கொள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.பின்னால் நின்று கொண்டிருந்த இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் நீ முதலில் அல்லாஹ்வை திருப்தி கொண்டால் தான் அல்லாஹ் உன்னை திருபதி கொள்வான் என்றார்கள்.அதற்கு அவர் அல்லாஹ்விடம் திருப்தியைக் கேட்கத்தான் முடியும்.எப்படி அல்லாஹ்வை திருப்தியை கொள்ள முடியும் என்று கேட்டார்.அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள், அல்லாஹ் தரும் நிஃமத்தைக் கொண்டு திருப்தி கொள்வது போன்று அவன் தரும் சோதனைகளைக் கொண்டும் திருப்தி கொள்ள வேண்டும் என்றார்கள்.

الإيمان الحقيقي يظهر في الشدائد:
 ذات مرَّة سُئل الإمام الشافعي: يا إمام، " أندعو الله بالتمكين أم بالابتلاء ؟ فتبسَّم، وقال: لن تُمَكَّنَ قبل أن تُبْتَلَى
ஒரு முறை ஷாஃபிஈ ரஹ் அவர்களிடம் ஒருவர், நான் அல்லாஹ்விடம் உயர்வைக் கேட்கவா சோதனையைக் கேட்கவா என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் சோதனை இல்லாமல் உயர்வு பெற முடியாதே என்றார்கள்.

بينا النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ جالسٌ وعندَه أبو بَكرٍ الصِّدِّيقُ وعليهِ عباءةٌ قد جلَّلَها على صدرِه بِجِلالٍ إذ نزلَ عليهِ جبريلُ عليهِ السَّلامُ فأقرأَه منَ اللَّهِ السَّلامَ وقالَ يا رسولَ اللَّهِ ما لي أرى أبا بَكرٍ عليهِ عباءةٌ قد جلَّلَها على صدرِه بجِلالٍ قال يا جبريلُ أنفقَ مالَه عليَّ قبلَ الفتحِ قال فأقرِئهُ منَ اللَّهِ السَّلامَ وقل لهُ يقولُ لَك ربُّكَ أراضٍ أنتَ عنِّي في فقرِك هذا أم ساخِطٌ فالتفتَ النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ إلى أبي بَكرٍ فقال يا أبا بَكرٍ هذا جبريلُ يقرئُك السَّلامَ منَ اللَّهِ ويقولُ أراضٍ أنتَ عنِّي في فقرِك هذا أم ساخطٌ فبَكى أبو بَكرٍ وقالَ أعلى ربِّي أغضبُ أنا عن ربِّي راضٍ أنا عن ربِّي راضٍ

الراوي: عبدالله بن عمر المحدث: أبو نعيم           - المصدر: حلية الأولياء – الصفحة أو الرقم: 7/115                       
பெருமானார் ஸல் அவர்களுடன் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் அமர்ந் திருந்தார்கள்.அவர்கள் உடுத்துவதற்கு வேறு ஆடையின்றி மேனியில் ஒரே ஒரு துண்டை மட்டும் போட்டிருந்தார்கள். அந்நேரம் ஜிப்ரயீல் அலை அவர்கள் வருகை தந்து ஏன் உங்கள் நண்பர் அபூபக்கர் மேனியில் வெறும் துண்டை மட்டும் அணிந்திருக்கிறார் என்று கேட்டார்கள்.அவர் தன்னிடம் இருந்த பொருள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விட்டார்கள்.இப்போது அவரிடம் எதுவும் இல்லை என்றார்கள்.அவரிடம் அல்லாஹ்வின் ஸலாமை சொல்லி விடுங்கள்.இந்த நிலையிலும் அபூபக்கர் என்னை திருப்தி கொள்கிறாரா இல்லை அதிருப்தி கொள்கிறாரா என்று அல்லாஹ் கேட்டான் என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் சொன்னார்கள்.அதைக் கேட்டதும் அபூபக்கர் ரலி அவர்கள் அழு கொண்டே நான் என்னைப் படைத்த ரப்பை அதிருப்தி கொள்வேனா ! நான் அவனை இப்போதும் பொருந்திக் கொள்கிறேன் பொருந்திக் கொள்கிறேன் என்றார்கள். {ஹுல்யதுல் அவ்லியா}

எனவே சோதனைகள் வருகின்ற போது மனம் தளர்ந்து விடாமல் அப்போதும் அல்லாஹ்வை திருப்தி கொள்ள வேண்டும். சோதனை களின் போது அதிருப்தி அடைபவன் நஷ்டமடைந்தவன்.

وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் - இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)


தராவீஹ் 15 ம் நாள்




أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ كُلٌّ قَدْ عَلِمَ
صَلَاتَهُ وَتَسْبِيحَهُ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவைகளும் இறக்கைகளை விரித்த நிலையில் {பறக்கின்ற} பறவைகளும் நிச்சயமாக அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன என்பதை {நபியே!} நீங்கள் பார்க்க வில்லையா  ? ஒவ்வொன்றும் அதன் தொழுகையையும் தஸ்பீஹையும் அறிந்திருக் கின்றன.அல்லாஹ் அவர்கள் செய்கின்றவன்றை நன்கு அறிந்தவன். {24 ;41}


உலகத்தில் மனிதர்கள் மட்டுமல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துக்களும் அனைத்து படைப்புக்களும் படைத்தோனாம் அல்லாஹ்வை வணங்குகிறது, தொழுகிறது.அவனுக்குக் கட்டுப்பட்டுத் தான் தன் காரியங்களை அமைத்துக் கொள்கிறது என்பது இந்த வசனம் சொல்லும் செய்தி.

இதே கருத்தை பதிவு செய்யும் வசனங்கள் திருமறைக் குர்ஆனில் நிறைய உண்டு. 

 ( أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون ) [ النحل : 48
அல்லாஹ் படைத்த எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு சுஜுது செய்வதற் காக{த்தான்} வலப்பக்கமும் இடப்பக்கமும் அந்தப் பொருளின் நிழல்கள் சாய்கின்றன என்பதை நீங்கள் பார்க்க வில்லையா? {16 ; 48}

( وإن من شيء إلا يسبح بحمده ) [ الإسراء : 44 ]
அவனது புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்யாமல் உலகில் எந்தப் பொருளும் இல்லை {17 ; 44}

எனவே அனைத்துப் படைப்புக்களும் அவைகளுக்குரிய வடிவத்தில் அவைகளுக்கு கற்றுக் கொடுத்த வழிமுறையில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றன.அவைகள் புரியும் வணக்கமும் அவைகளின் தஸ்பீஹும் நமக்குத்தான் புரிய வில்லை என்பதை {17 ; 44} வசனத்தில் தொடரில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த வசனங்களின் கருத்துக்களை பல்வேறு நபிமொழிகளும் உறுதிப் படுத்துகிறது.
 
أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ قالَ يومًا أتدرونَ أينَتذهبُ هذهِ الشَّمسُ ؟ قالوا اللَّهُ ورسولُهُ أعلمُ قالَ إنَّ هذهِالشَّمسَ تجري حتَّى تنتَهيَ تحتَ العرشِ فتخرُّ ساجدةً فلا تزالُ كذلِكَ حتَّى يقالَ لَها ارتفِعي ارجِعي من حيثُ جئتِ فتُصبحُ طالعةً من مطلعِها ثمَّ تجري حتَّى تنتَهيَ إلى مستقرِّها ذاك تحتَ العرشِ فتخرُّ ساجدةً ولا تزالُ كذلِكَ حتَّى يقالَ لَها ارتفِعي ارجِعي من حيثُ جئتِ فترجعُ فتصبحُ طالعةً من مطلعِها ثمَّ تجري لا يستنكرُ النَّاسَ منها شيئًا حتَّى تنتَهيَ إلى مستقرِّها ذاكَ تحتَ العرشِ فيقالُ لَها ارتفِعي أصبِحي طالعةً من مغربِكِ فتصبحُ طالعةً من مغربِها فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أتدرونَ متى ذاكُم ؟ ذاكَ حينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا [ 6 / الأنعام / آية 158 ]
சூரியன் மறையும் நேரத்தில் இந்த சூரியன் எங்கே செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள், அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழே சுஜுது செய்வதற்காக செல்கிறது.அப்படியே சுஜூதிலேயே இருக்கிறது. அதன் பிறகு அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்க்கும். பின்பு நீ திரும்பு என்று சொல்லப்பட்ட பிறகு தான் அது உதயமாகும்.இப்படியே ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது என்றார்கள். {முஸ்லிம் ;159}

وأما الجبال والشجر فسجودهما بفيء ظلالهما عن اليمين والشمائل : وعن ابن عباس قال : جاء رجل فقال : يا رسول الله ، إني رأيتني الليلة وأنا نائم ، كأني أصلي خلف شجرة ، فسجدت فسجدت الشجرة لسجودي ، فسمعتها وهي تقول : اللهم اكتب لي بها عندك أجرا ، وضع عني بها وزرا ، واجعلها لي عندك ذخرا ، وتقبلها مني كما تقبلتها من عبدك داود . قال ابن عباس : فقرأ النبي صلى الله عليه وسلم سجدة ثم سجد ، فسمعته وهو يقول مثل ما أخبره الرجل عن قول الشجرة .
رواه الترمذي ، وابن ماجه ، وابن حبان في صحيحه
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ் நான் ஒரு கனவு கண்டேன்.அதில் ஒரு மரத்தின் பின்னால் நான் தொழுதேன்.நான் ஸஜ்தா செய்தேன்.நான் ஸஜ்தா செய்வதைப் பார்த்து அந்த மரமும் ஸஜ்தா செய்தது.அப்போது அந்த மரம் சொன்னது, இறைவா நான் செய்த ஸஜ்தாவிற்கு பகரமாக உன்னிடம் எனக்கு கூலியை பதிவு செய்.என்னிலிருந்து ஒரு குற்றத்தை அழித்து விடு.உனது அடியார் தாவூது நபியிடமிருந்து நீ ஏற்றுக் கொண்டதைப் போன்று என்னிடமிருந்தும் நீ ஏற்றுக் கொள் என்று அந்த மரம் சொன்னதாக அந்த மனிதர் கூறினார். நபி ஸல் அவர்கள் ஒரு ஸஜ்தாவின் வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தார்கள்.அப்போது அந்த மரம் எந்த வார்த்தை சொன்னதோ அதே வார்த்தையை நபி ஸல் அவர்கள் சொல்வதை நான் கேட்டேன் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். {இப்னு ஹிப்பான் ; 1758}

وقوله ( وإن من شيء إلا يسبح بحمده ) أي وما من شيء من المخلوقات إلا يسبح بحمد الله ( ولكن لا تفقهون تسبيحهم ) أي لا تفقهون تسبيحهم أيها الناس لأنها بخلاف لغتكم وهذا عام في الحيوانات والنبات والجماد وهذا أشهر القولين كما ثبت في صحيح البخاري عن ابن مسعود أنه قال كنا نسمع تسبيح الطعام وهو يؤكل .
كنا نَعُدُّ الآياتِ برَكَةً، وأنتم تعُدُّونها تخويفًا، كنا معَ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم في سفرٍ، فقلَّ الماءُ، فقال : ( اطلُبوا فَضلةً من ماءٍ ) . فجاؤوا بإناءٍ فيه ماءٌ قليلٌ، فأدخَل يدَه في الإناءِ ثم قال : ( حيَّ على الطَّهورِ المبارَكِ، والبرَكَةِ من اللهِ ) . فلقد رأيتُ الماءَ ينبُعُ من بين أصابعِ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم، ولقد كنا نسمَعُ تسبيحَالطعامِ وهو يؤكَلُ .

الراوي: عبدالله بن مسعود المحدث: البخاري       - المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 3579

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; நாங்கள் ஒரு சமயம் நபி ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்.அப்போது எங்களுக்கு பயன் படுத்த தண்ணீர் இல்லை.தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தேடுங்கள் என்று கூறினார்கள்.தண்ணீர் தேடிச்சென்ற தோழர்கள் ஒரு சின்ன பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். அதில் நபி ஸல் அவர்கள் தங்கள் கரத்தை நுழைத்தார்கள்.பின்பு பரக்கத்தின் பக்கம் வாருங்கள் என்று கூறினார்கள்.அப்போது அவர்களது கரங்களிலிருந்து தண்ணீர் பொங்கி வந்ததை நாங்கள் பார்த்தோம். அந்நேரத்தில் நாங்கள் சாப்பிட்ட உண்வு தஸ்பீஹ் செய்ததையும் கேட்டோம் என்று சொல்கிறார்கள். {புகாரி}

وفي حديث أبي ذر أن النبي صلى الله عليه وسلم أخذ في يده حصيات فسمع لهن تسبيح كحنين النحل وكذا يد أبي بكر وعمر وعثمان رضي الله عنهم [ أجمعين ، وهو حديث مشهور في المسانيد .
وقال الإمام أحمد حدثنا ابن لهيعة حدثنا زبان عن سهل بن معاذ بن أنس عن أبيه رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه مر على قوم وهم وقوف على دواب لهم ورواحل فقال لهم اركبوها سالمة ودعوها سالمة ولا تتخذوها كراسي لأحاديثكم في الطرق والأسواق فرب مركوبة خير من راكبها وأكثر ذكرا لله منه .

நபி ஸல் அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்து சென்றார்கள்.அவர்கள் தங்கள் வாகனங்களின் மீது அமர்ந்திருந்தார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் அழகிய முறையில் உங்கள் வாகனங்களில் பயணம் செய்யுங்கள்.அழகிய முறையில் அதை விட்டு விடுங்கள்.பயணத்தின் இடையில் நீங்கள் பேசுவதற்காக அதை அமரும் நாற்காலிகளாக ஆக்கி விடாதீர்கள். ஏனென்றால் உங்களை விட உங்கள் வாகனங்கள் அதிகம் அல்லாஹ்வை திக்ர் செய்கின்றன என்றார்கள். {அஹ்மது} 

وفي سنن النسائي عن عبد الله بن عمرو قال نهى رسول الله صلى الله عليه وسلم عن قتل الضفدع وقال نقيقها تسبيح
தவளையை கொல்வதை நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள்.அதன் சப்தம் தஸ்பீஹாகும் என்றார்கள். {நஸயீ}

بحديث ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير ؛ أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها نصفين ثم غرز في كل قبر واحدة ثم قال لعله يخفف عنهما ما لم ييبسا أخرجاه في الصحيحين .
قال بعض من تكلم على هذا الحديث من العلماء إنما قال ما لم ييبسا لأنهما يسبحان ما دام فيهما خضرة فإذا يبسا انقطع تسبيحهما والله أعلم
நபி ஸல் அவர்கள் இரு கப்ரை கடந்து செல்வார்கள்.இந்த இரு கப்ரில் உள்ளவர்களும் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று கூறி இரு ஈரமான மரக்கிளைகளை உடைத்து அதை இரண்டாக உடைத்து ஒவ்வொன் றையும் ஒவ்வொரு கப்ரிலும் நட்டி வைத்தார்கள்.இவைகள் காயும் வரை அவர்களின் வேதனை குறைக்கப்படும் என்றார்கள். {புகாரி}

நபி ஸல் அவர்கள் அவ்வாறு சொன்ன காரணம், அவைகள் ஈரமாக இருக்கும் வரை தஸ்பீஹ் செய்கின்றன என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

سمعتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم يقولُ: قرصت نملةٌ نبيًّا من الأنبياءِ ، فأمر بقريةِ النملِ فأُحْرِقت، فأوحى اللهُ إليه: أن قرصتك نملةٌ أحْرَقتَ أُمةً من الأُممِ تُسَبِّحُ.

الراوي: أبو هريرة المحدث: البخاري  - المصدر: صحيح البخاري - الصفحة أو الرقم: 3019

நபிமார்களில் ஒரு நபியை எறும்பொன்று கடித்து விட்டது.அந்த எறும்புப் புற்றை தீயிட்டுக் கொளுத்தும் படி அந்த அந்த நபி உத்தரவிட்டார்கள். அதன் படி கொளுத்தப்பட்டது.அப்போது அல்லாஹ் அந்த நபிக்கு ஒரு எறும்பு கடித்ததினால் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யும் ஒரு கூட்டத்தை அழித்து விட்டீர்களே என்று வஹியின் மூலம் கூறினான். {புகாரி ; 3019}

எனவே அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வை துதிக்கின்றன, அல்லாஹ்வைத் தொழுகின்றன.ஆனால் படைப்புக்களில் உயர்ந்த படைப்பான மனித சமூகம் தான் அதை விளங்குவதும் இல்லை. அவைகளைப்போன்று தொழுகையில் கவனம் செலுத்துவதும் இல்லை.

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ ۗ وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ ۩ (18)

{நபியே} நிச்சயமாக வானத்திலுள்ளவர்களும் பூமியிலுள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரமும் பிராணிகளும் மனிதர்களில் பெரும்பாலோரும் அல்லாஹ்விற்கு சுஜுது செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வில்லையா?.............. {22 ; 18}

இந்த வசனத்தில் எல்லாம் தன்னை வணங்குகிறது ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் அந்த வணக்கத்தில் பலகீனமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் பதிவு செய்கிறான்.அதனால் எல்லா வஸ்துக்களும் என்று பொதுவாக கூறி விட்டு மனிதர்களில் அதிகமானோர் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வை தொழுவதில் தஸ்பீஹ் செய்வதில் கவனம் செலுத்துவோம்.அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.


Wednesday, June 7, 2017

தராவீஹ் 14 ம் நாள்



وَ اِنَّ لَـكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً‌    نُسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهَا وَلَـكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ
 
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது.அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்;இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன;அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். (23:21)


இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா கால்கடைகள் குறித்தும் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பயன்கள் குறித்தும் கூறுகிறான்.

ذكر تعالى ما جعل لخلقه في الأنعام من المنافع ، وذلك أنهم يشربون من ألبانها الخارجة من بين فرث ودم ، ويأكلون من حملانها ، ويلبسون من أصوافها وأوبارها وأشعارها ، ويركبون ظهورها ويحملونها الأحمال الثقال إلى البلاد النائية عنهم ، كما قال تعالى : ( وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرءوف رحيم ) [ النحل : 7 ] ، وقال تعالى :( أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون . وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون . ولهم فيها منافع ومشارب أفلا يشكرون ) [ يس : 71 73
கால்நடைகள் என்றால் அதில் ஆடு,மாடு,ஒட்டகம் இவைகள் அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பால் கிடைக்கிறது.அதன் மாமிசத்தை உண்ணுகிறோம்.அதன் தோல்களின் மூலம் தயாரிக்கப்பட்டவைகளை நாம் அணிந்து கொள்கிறோம்.அவைகள் வாகனமாக பயன்படுகிறது. மனிதர்களின் சுமைகளை சுமக்கவும் உதவுகிறது.இப்படி எண்ணற்ற நற்பயன்கள் இருப்பதை அல்லாஹ் தன் வேதத்தில் பல்வேறு வசனங்களின் வழியே நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.

இன்றைக்கு இறைச்சி விற்பது கூடாது.அறுப்பதற்காக மாடு ஒட்டகம் போன்றவைகளை விற்பது கூடாது என்று கூறி இஸ்லாமிய பாரம்பரிய உணவாக இருக்கிற இறைச்சியை தடை செய்யும் ஒரு முயற்சியில், சூழ்ச்சியில் இறங்கி மாட்டை வைத்து அரசியல் செய்ய மத்திய பா.ஜ.க அரசாங்கம் நினைக்கிறது.இந்த தருணத்தில் மாட்டிறைச்சியைப் பற்றியும் மாட்டு மாமிசத்தின் சத்தைப்பற்றியும் விரிவாக அலச வேண்டும்.

உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. 

அமெரிக்காபிரேசில்சவூதி அரேபியா , சீனா மற்றும்  ஐரோப்பியப் பகுதிகளில்  இருப்பவர்களால் மாட்டிறைச்சி அதிகம் விரும்பி உண்ணப் படுகின்றது

இந்து சமயத்தில் மட்டும்  பசு கடவுளாக வணங்கப்படுவதால்,அதிலும்  உயர்சமூகப் பிரிவினர் மட்டும்  மாட்டிறைச்சியை உண்பதில்லை. இருப்பினும், இச்சமயத்தில் மற்ற எல்லா சமூகப் பிரிவினர்களும்  மாட்டிறைச்சியை உண்பதுண்டு.

உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மாட்டிறைச்சியை தடை செய்ய துடிக்கும் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது என்பது உண்மை.

தடை உத்தரவு வகுப்புவாத நோக்கம் கொண்டது. குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளையே நிறைவேற்றி வருகிறது பி.ஜே.பி. இதன் ஒரு பகுதியாக மாட்டிறைச்சியின் பேரால் தங்கள் ஆட்சியிலுள்ள மாநிலங்களிலும், தங்களுக்கு வலுவுள்ள இடங்களிலும் சிறுபான்மை மக்கள் மற்றும் தலித்கள் மீது கடுமையான தாக்குதல்களைப் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று காரணம் கூறி முகம்மது அக்லாக் அடித்தே கொல்லப்பட்டார்.

குஜராத் மாநிலம் உனாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்ததற்காக 4 தலித் இளைஞர்கள் இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பெஹ்லூக்கான் எனும் பால் வியாபாரி பால் வியாபாரத்துக்காகப் பசுக்களை வாங்கி வரும் போது ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரால் சமூக விரோதிகளால் அடித்தே கொல்லப்பட்டார். மேலும் அஜ்மல், ரபீக் ஆகியோர் படுகாயப்படுத்தப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தற்போது நாடு முழுவதும் கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று உத்தரவிட்டும், தகுதியற்ற கால்நடைகளைக் கூட விற்பனை செய்வதைத் தடை செய்தும், கால்நடை விற்பனைக்குப் பலவிதமான கடுமையான நிபந்தனைகளை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. மத்திய பி.ஜே.பி அரசின் இந்த உத்தரவு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கக் கூடியது.

ஒருவன் எந்த உணவை உண்ண வேண்டும் என்று அரசே தீர்மானிப்பது அநீதியானது. மேலும், இதனால் உயர்சாதி மக்களின் உணவுப் பழக்கத்தை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையோர் மற்றும் தலித்கள் மீது அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தித் திணிக்கும் தன்மை கொண்டது. இது, ஒற்றைக் கலாசாரத்தைத் திணிக்கும் சங் பரிவாரத்தின் அஜண்டாவை மத்திய ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்பந்தமாக அமலாக்கும் முயற்சியாகும்.

இறைச்சி என்பது மிகச்சிறந்த உணவு மட்டுமல்ல நம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்று.சுவனத்தில் தரப்படும் உணவுமுறைகளைக் குறித்து கூறும் இறைவன் அதில் மாமிசத்தையும் சொல்கிறான்.

في معرض ذكره لما أعده الله لعباده المتقين قال تعالى: {و أمددناهم بفاكهة ولحم مما يشتهون} [الطور:22]. وقال تعالى: {و لحم طير مما يشتهون} [الواقعة:  21]
{பலவகையான}பழத்தையும் இன்னும் அவர்கள் விரும்புகின்றவற்றி லிருந்து இறைச்சி {வகை} யையும் அவர்களுக்கு நாம் ஏராளமாக தருவோம். {52 ; 22}

மிகச்சிறந்த உணவு என்று இறைச்சியை பெருமானார் ஸல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

عن أبي موسى الأشعري (رض) قال: قال رسول الله ص:“ فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام” والثريد الخبز واللحم. [رواه البخاري ومسلم]
மற்ற உணவுகளை விட சரீது எப்படி சிறந்ததோ அதுபோன்று மற்ற மனைவிமார்களை விட ஆயிஷா சிறந்தவள்.{புகாரி,முஸ்லிம்} சரீது என்றால் ரொட்டியும் இறைச்சியும் என்று சொல்லப்படுகிறது.

இறைச்சியில் முன் சப்பையை நபி ஸல் அவர்கள் விரும்பி உண்பார்கள்.

…وفي الصحيحين عن أبي هريرة (رض) أن رسول الله ص رفعت إليه الذراع وكانت تعجبه ” .. ” ..وعن أبي هريرة (رض) قال: أُتي النبي ص بلحم فدفع إليه الذراع وكانت تعجبه فنهش منها، [رواه الترمذي وقال حديث حسن صحيح
நபி ஸல் அவர்களிடம் ஒரு முறை கறி கொண்டு வரப்பட்டது.அதில் முன் சப்பையை அவர்கள் முன் வைக்கப்பட்டது.அதனை விரும்பி கடித்து சாப்பிட்டார்கள். {திர்மிதி}

இப்படி மிகச்சிறந்த நம் பாரம்பரிய உணவாக இருக்கிற இறைச்சியை தடை செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது ஏற்பட்டிருக்கிற இந்த மாமிசப் பிரச்சனை நமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும்.இந்நேரம் நாம் விழிப்படைய வேண்டிய தருணமாகும்.

இதுமாதிரியான சோதனைகளை நாம் சந்திக்க காரணம் என்ன என்பதை நாம் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாம் புரிந்து கொண்டிருக்கும் பாவங்களும் மார்க்கத்தின் காரியங்களில், அல்லாஹ் ரசூல் வகுத்துத் தந்த கடமைகளில் நமக்கிருக்கும் பலகீனமும் தான் இதற்குக் காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.   

 وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். எனினும், அவன் பெரும்பாலான பிழைகளை பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றான்”. ( அல்குர்ஆன்: 42: 30 )

 قال النبي صلى الله عليه وسلم
إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ وَرَضِيتُمْ بِالزَّرْعِ وَتَرَكْتُمْ الْجِهَادَ سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ] رواه أبو داود وأحمد

உங்கள் வியாபாரம் மிகவும் தந்திரமான ( ஈனா ) அடிப்படையில் அமைந்திருக்கும் போது, மாடுகளின் காதுகளைப் பிடித்துக் கொண்டு விவசாயங்களை நீங்கள் திருப்தி பட்டுக் கொள்ளும் போது ( உலக மோகத்தை மாநபி {ஸல்} அவர்கள் இப்படியான உவமானத்தைக் கொண்டு குறிப்பிடுகின்றார்கள். ) அறப்போராட்டங்களை நீங்கள் கைவிடும் போது அல்லாஹ் உங்கள் மீது இழிவையும், கேவலத்தையும் சாட்டுவான்.மீண்டும் நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால் திரும்புகின்ற வரை அந்த இழிவு நீடித்து இருக்கும். நீங்கள் திரும்பி விட்டால் அல்லாஹ் உங்களை விட்டும் அதை நீக்கி விடுவான்என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.  ( நூல்: அஹ்மத்

மேற்கூறிய நபிமொழியில் இரண்டு அம்சங்கள் பொதிந்து இருக்கின்றன. முதலாவது அம்சம் முஸ்லிம்களுக்கு இழிவும் கேவலமும் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்த எச்சரிக்கை.

இரண்டாவது அம்சம் முஸ்லிம்கள் சில பாவங்களால் தொடர்ச்சியாக சில காலங்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அப்படியான காலங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்பட்டு வாழும் போது அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைக்கும் என்றும் உணர்த்துகின்றார்கள்.

جاء رسول عمر بن الخطاب من إحدى الغزوات فبشره بالنصر
فسأله عمر بن الخطاب : متى بدأ القتال ؟
فقالوا : قبل الضحى
قال : ومتى كان النصر ؟
فقالوا : قبل المغرب
فبكى سيدنا عمر حتى ابتلت لحيته..
فقالوا : يا أمير المؤمنين نبشرك بالنصر فتبكى ؟
فقال رضي الله عنه : والله إن الباطل لا يصمد أمام الحق طوال هذا الوقت إلا بذنب أذنبتموه أنتم أو أذنبته أنا ...                      
ஷாம் தேசத்திற்கு உமர் (ரலி) அவர்கள் அனுப்பியிருந்த படைப்பிரிவுகளின் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்திருந்தார்.

வந்தவர், ”அமீருல் முஃமினீன் அவர்களே! நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்றுவிட்டது. அல்லாஹ் நமது படைப்பிரிவுக்கு வெற்றியை நல்கினான்என்று கூறினார்.

அது கேட்ட உமர் (ரலி) அவர்கள் எப்போது நமது படை வீரர்கள் எதிரணியினரின் படை வீரர்களோடு போரிட ஆரம்பித்தனர்?” என்று கேட்டார்கள்.

அதற்கவர், ”ளுஹா உடைய நேரத்திற்கு சற்று முன்னதாகஎன்று பதில் கூறினார்.

அப்போது, உமர் (ரலி) அவர்கள் எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்தது?” என்று கேட்டார்கள்.

அதற்கவர், “மஃக்ரிப் உடைய நேரத்திற்கு சற்று முன்னதாகஎன்று பதில் கூறினார்.

இந்த பதிலைக் கேட்டதும் தான் தாமதம் உமர் (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அழுகையின் உச்சபட்சமாக தாடி முழுவதும் நனைந்து தேம்பித் தேம்பி அழுதார்கள்.

சபையில் இருந்தவர்கள், உமர் (ரலி) அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றார்கள். எனினும், உமர் (ரலி) அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.

அப்போது, சபையில் இருந்தவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே! அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகின்றீர்கள்? அவர் நல்ல செய்தியைத் தானே சொல்லியிருக்கின்றார்? நமது படை வெற்றி பெற்றது மகிழ்ச்சியான செய்தி தானே?” என்று கேட்டனர்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அசத்தியத்திற்கெதிரான அறப்போரட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு நேரம் வரை தாமதம் ஆகாது, அப்படியானால், நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்? அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்?” இல்லையென்றால், இவ்வுளவு நேரம் வெற்றி தாமதப்பட்டிருக்காது”. என்று பதில் கூறினார்கள்.
( நூல்: அல் மத்ஃகல் லிஇமாமி இப்னுல் ஹாஜ் (ரஹ்)…, ஸிராஜுல் முலூக் லி இமாமி அத் தர்தூஸீ (ரஹ்)… )

பாவமான காரியங்களை நடக்கிற போது அதை தடுக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் வலியுறுத்தினார்கள்.நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சோதனைக்கு அந்த தீமைகளை நாம் தடுக்காததும் ஒரு காரணம்....

قال النبي صلى الله عليه وسلم
 إن الناس إذا رأوا المنكر فلم يغيروه أوشك أن يعمهم الله بعقابه
 أخرجه الإمام أحمد رحمه الله بإسناد صحيح عن الصديق رضي الله عنه

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
மக்கள் செய்யும் பாவமான செயல்களை தடுக்கவில்லையானால் அல்லாஹ் தண்டனையை எல்லோருக்கும் பொதுவாக்கி விடுவான்என நபி {ஸல்} அவர்கள்கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

حدثنا هاشم بن القاسم ، حدثنا زهير - يعني ابن معاوية - حدثنا إسماعيل بن أبي خالد ، حدثنا قيس قال : قام أبو بكر ، - رضي الله عنه - ، فحمد الله وأثنى عليه ، وقال : أيها الناس ، إنكم تقرؤون هذه الآية : ( يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم ) إلى آخر الآية ، وإنكم تضعونها على غير موضعها ،لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليستعملن الله سبحانه وتعالى عليكم شراركم فليسومنكم سوء العذاب ، ثم ليدعون الله عز وجل خياركم فلا يستجاب  لكم
 وإني سمعت رسول الله - صلى الله عليه وسلم - قال : " إن الناس إذا رأوا المنكر ولا يغيرونه أوشك الله ، عز وجل ، أن يعمهم بعقابه

அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தும் போது மக்களே! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாதுஎனும் ( அல்குர்ஆன்: 5: 105 ) இந்த வசனத்தை ஓதுகின்றீர்கள். ஆனால், அதற்கு தவறான பொருளை அறிவிக்கின்றீர்கள்.

மக்கள் தீய செயல்கள் நடப்பதைக் கண்ணால் கண்ட பின்பும் அதைத் தடுக்க முயற்சிப்பதில்லை. அநியாயக்காரன், அநீதி இழைப்பதைக் கண்டும் அவன் கரத்தைப் பிடித்து அதைத் தடுப்பதில்லை என்றால் இத்தகைய நிலையில் அல்லாஹ் வேதனை தரும் தண்டனையை நல்லவர், கெட்டவர் அனைவரின் மீதும் விரைவில் இறக்கி விடுவான்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நற்செயல்கள் புரியுமாறு ஏவி, தீய செயல்களைத் தடுத்து நிறுத்துவது உங்கள் மீது கடமையாகும்.  இவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில், அல்லாஹ் உங்களில் மிகவும் கீழ்த்தரமான, கேடுகெட்ட நபர்களை உங்களுக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவிடுவான்.

அவர்கள் உங்களுக்கு அதிகமான தொல்லைகளைக் கொடுப்பார்கள். துன்பங்களைத் தருவார்கள். பின்னர், உங்களில் நல்லவர்கள் அக்கேடு கெட்டவர்களின் தீங்கிலிருந்து பாதுகாத்திடுமாறு இறைவனிடம் பிரார்த்திப்பார்கள். ஆனால், அந்த பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரிக்க மாட்டான்என மாநபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் என கூறினார்கள்.( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ )

من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب
யார் பாவமன்னிப்பை அவசியமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு எல்லா நெருக்கடிகளிலிருந்தும் விடுதலையையும் எல்லா கவலைகளிலிருந்து நிவாரணத்தையும் அல்லாஹ் தருவான்.இன்னும் அவன் அறியாத புறத்திலிருந்து ரிஸ்கையும் தருகிறான்.{அபூதாவூது}


எனவே நாம் புரிந்து கொண்டிருக்கும் பாவங்களை குறைத்துக் கொண்டு நாம் செய்த பாவங்களிலிருந்து தவ்பா செய்தால் அல்லாஹ் நமக்கு ஏற்படும் இதுபோன்ற   சோதனைகளை நீக்கி நமக்கு எல்லா வகையிலும் வெற்றியைத் தருவான்.