Wednesday, May 31, 2017

தராவீஹ் 23 ம் நாள்



قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ
அல்லாஹ்விடம் முறையிட்ட நிலையில் தன் கணவர் விஷயமாக உங்களிடம் தர்க்கம் செய்த பெண்மனியின் சொல்லை அல்லாஹ் திட்டமாக கேட்டு விட்டான்.உங்கள் இருவரின் உரையாடலையும் அல்லாஹ் செவிமடுத்து விட்டான்.நிச்சயமாக அல்லாஹ் கேட்பவனாக வும் பார்ப்பவனாகவும் இருக்கிறான். {58 ; 1}


لك هي خولة بنت ثعلبة رضي الله عنها، التي قالت عنها أم المؤمنين عائشة رضي الله عنها: الحمد لله الذي وسع سمعه الأصوات، لقد جاءت المجادلة إلى رسول الله صلى الله عليه وسلم وأنا في ناحية البيت، تشكو زوجها، فأنزل الله سبحانه في القرآن الكريم سورة كاملة بحقها، سماها سورة المجادلة، افتتحها سبحانه بقوله: {قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير} (المجادلة:1).
وتذكر كتب التفاسير بخصوص سبب نزول هذه الآية الكريمة، أن خولة بنت ثعلبة زوجة أوس بن الصامترضي الله عنهما، كان بينها وبين زوجها ما يكون بين الرجل وزوجته من خلاف. وقد كان زوجها رجلاً سريع الغضب، فلما كان بينهما ما كان، حلف أن لا يقربها، وقال لها: أنت علي كأمي. وكانت هذه العادة من عادات الجاهلية التي حرمها الإسلام، لكن بقيت رواسبها عند البعض.
ثم إن أوسًا بعد ما كان منه ما كان، أراد أن يقرب زوجته فامتنعت منه، ورفضت أن تستجيب له، حتى يأتي رسول الله صلى الله عليه وسلم ويخبره بما كان، لكن أوسًاتحرج منعه الحياء أن يذكر لرسول الله ما جرى منه؛ فذهبت خولة بنفسها إلى رسول الله صلى الله عليه وسلم، وأخبرته بالذي حدث، فقال لها رسول الله صلى الله عليه وسلم: (ما أراك إلا قد حرمت عليه) !! فأخبرت رسول الله صلى الله عليه وسلم أن زوجها لم يرد بقوله ذلك طلاقًا ولا فراقًا، فأجابها رسول الله ثانية: (ما أراك إلا قد حرمت عليه)، فلما سمعت جواب رسول الله التجأت إلى الله قائلة: اللهم إليك أشكو حالي وفقري.
ثم أخذت تحاور رسول الله لتقنعه أنها تحب زوجها، ولا تريد فراقه، وأنه يبادلها نفس المشاعر، فما كان من رسول الله إلا أن أجابها ثالثة: (ما أراك إلا قد حرمت عليه)؛ ومع هذا، فإنها لم تيأس من رحمة الله، ومن ثم أخذت من جديد تحاور رسول الله صلى الله عليه وسلم، عن طريق التركيز على الجانب العاطفي والإنساني، لعلها تقنعه بإيجاد مخرج للمأزق الذي هي فيه، فتقول له: فإني وحيدة، ليس لي أهل سواه...إن لي صبية صغارًا، إن ضممتهم إليه ضاعوا، وإن ضممتهم إلي جاعوا، فلا يجد لها رسول الله جوابًا إلا أن يقول لها: (لا أراك إلا قد حرمت)، فلما لم تجد لها جوابًا عند رسول الله، التجأت إلى الله قائلة: اللهم أنزل على لسان نبيك ما يقضي لي في أمري، فلم تكد تنتهي من دعائها، حتى أنزل الله على نبيه قوله سبحانه: {قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير}.
ثم إن رسول الله صلى الله عليه وسلم بعد أن أنزل الله عليه قرآنًا، بين فيه حكم هذه الواقعة، دعا زوجها أوسًا ، وسأله أن يحرر عبدًا كفارة عن فعله، فأخبر أوس رسول صلى الله عليه وسلم أنه لا طاقة له بذلك، فسأله رسول الله إن كان يستطيع أن يصوم شهرين، فأجابه أنه لا يستطيع؛ لأنه رجل قد تقدم به العمر، والصيام يضعفه، حينئذ طلب منه رسول صلى الله عليه وسلم أن يتصدق على ستين مسكينًا، فأخبره أنه لا يملك من المال ما يتصدق به، فلما رأى عليه الصلاة والسلام من حاله ما رأى، تصدق عنه، وطلب منه أن يعود إلى زوجته.
கவ்லா பின்த் ஸஃலபா என்ற பெண்மனிக்கும் அவரது கணவர் அவஸ் பின் ஸாமித் ரலி அவர்களுக்கும் ஒரு சமயம் சின்ன சண்டை ஏற்பட்டு கோபத்தில் அவர் தன் மனைவியைப் பார்த்து நீ என் மீது என் தாயின் முதுகைப் போல என்று கூறி விட்டார்.{பொதுவாக ஒருவர் தன் மனைவியை தனக்கு மஹ்ரமான ஒரு பெண்ணோடு இவ்வாறு ஒப்பிட்டு கூறி விட்டால் அதற்கு மார்க்கத்தில் ளிஹார் என்று சொல்லப்படும். அந்த நேரத்தில் அந்த இருவருக்கும் மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விடும். இருவரும் அதன் பிறகு சேர்ந்து வாழ முடியாது}

சிறிது நாட்கள் கழித்து தான் சொன்னது தவறு என்றுணர்ந்து மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பி மனைவியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.அதற்கு கவ்லா ரலி அவர்கள், நான் நபியிடம் சென்று இதற்கான விளக்கத்தை தெரிந்து வருகிறேன் என்று கூறி நபியிடம் வந்து கேட்ட போது நபி ஸல் அவர்கள், உங்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விட்டது.எனவே நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.

அதற்கு அந்த பெண்மனி, யாரசூலல்லாஹ் என் கணவர் கோபத்தில் சொன்ன வார்த்தை.அதனைக் கொண்டு அவர் தலாக்கை நாட வில்லை என்று கூறிய போது  நபி ஸல் அவர்கள், எப்படியிருந்தாலும் நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.அந்த பெண்மனி போய் விடுகிறார்கள்.

மறுபடியும் இரண்டாவது முறை வந்து சேர்ந்து வாழ்வதற்கான கோரிக்கையை வைத்தார்.என் கணவர் தலாக் விட வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்ல வில்லை. ஏதோ கோபத்தில் சொல்லி விட்டார் என்று சொல்லிப் பார்த்தார்.அப்போதும் நபி ஸல் அவர்கள் முந்தைய பதிலையே சொன்னார்கள்.இதற்கிடையில் அந்த பெண்மனி அல்லாஹ் விடமும் தன் பிரச்சனைக்கான தீர்வை நாடி துஆ செய்து கொண்டிருந்தார்.

கொஞ்ச நாள் பிறகு மறுபடியும் அந்த பெண்மனி வந்து யாரசூலல்லாஹ் நான் வயதான பெண்மனி.எனக்கு ஆதரவாக என் குடும்பத்தில் யாருமில்லை. என் கணவரும் வயதானவர் அவருக்கும் என்னை விட்டால் ஆதரவில்லை. எனக்கு சின்ன பிள்ளைகளும் இருக்கிறார்கள்.அவர்களையும் கவனிக்க வேண்டும்.அந்த பிள்ளைகளை என் கணவரோடு விட்டால் அவர்கள் வீணாகி விடுவார்கள்.என்னோடு வைத்துக் கொண்டால் பசியால் வாடிப் போவார்கள்.எனவே இக்கட்டான சூழ்நிலையிலே நான் இருக்கிறேன் என்று அந்த பெண்மனி கூறினார்கள்.அப்போதும் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இதற்கான எந்த பதிலும் வர வில்லை. அதனால் நீங்கள் சேர்ந்து வாழ வழியில்லை என்று கூறினார்கள்.

இப்படி மூன்று முறை கேட்டும் தன் இயலாமையை வெளிப்படுத்தியும் எந்த பலனும் ஏற்பட வில்லை.இருந்தாலும் அவர்கள் மனம் தளர வில்லை.அல்லாஹ்விடம் தன் கோரிக்கைத் தொடர்ந்தார்கள்.

என் பிரச்சனைக்கான ஒரு தீர்வை உன் நபியின் நாவின் வழியாக எனக்கு ஏற்படுத்து என்று அல்லாஹ்விடம் கேட்டு அழுதார்கள்.கெஞ்சி கண்ணீர் வடித்தார்கள்.அவர்களின் அந்த குரல் அல்லாஹ்வின் அர்ஷின் கதவைத் தட்டியது.அல்லாஹ் மேல்கூறிய வசனத்தை இறக்கி வைத்தான்.

ஒரு அடிமையை உரிமை விடுதல்,60 நாட்கள் நோன்பு நோற்றல்,60 ஏழைகளுக்கு உணவளித்தல் இந்த கஃப்பாராக்களில் ஒன்றை செய்து இருவரும் சேர்ந்து கொள்ளலாம் என்ற வசனங்களை இறக்கி வைத்தான்.

وقد مر بها عمر بن الخطاب رضي الله عنه في خلافته والناس معه على حمار ، فاستوقفته طويلا ، ووعظته وقالت : يا عمر قد كنت تدعى عميرا ، ثم قيل لك : عمر ، ثم قيل لك : أمير المؤمنين ، فاتق الله يا عمر ، فإنه من أيقن بالموت خاف الفوت ، ومن أيقن بالحساب خاف العذاب ، وهو واقف يسمع كلامها ، فقيل له : يا أمير المؤمنين ، أتقف لهذه العجوز هذا الوقوف ؟ فقال : والله لو حبستني من أول النهار إلى آخره لا زلت إلا للصلاة المكتوبة ، أتدرون من هذه العجوز ؟ هي خولة بنت ثعلبة سمع الله قولها من فوق سبع سموات ، أيسمع رب العالمين قولها ولا يسمعه عمر ؟ (قرطبي
ஒரு முறை ஹள்ரத் உமர் ரலி அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் தன் சீடர்களோடு நகர் வளம் வந்து கொண்டிருந்தார்கள்.இடையில் ஒரு மூதாட்டி குறிக்கிட்டு உமர் ரலி அவர்களுக்கு வெகு நேரம் உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.உமர் ரலி அவர்களும் அதை பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.அதனைக் கண்ணுற்ற சீடர்கள், இந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்டு ஒரு ஜனாதிபதியான நீங்கள் இவ்வளவு நேரம் நிற்க வேண்டுமா என்று கேட்டார்கள்.அப்போது உமர் ரலி அவர்கள் இடையில் தொழுகை நேரம் மட்டும் இல்லையெனில் அந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்க நான் இரவு வரை கூட நின்றிருப்பேன்.அவர்கள் யார் தெரியுமா ? கவ்லா பின் ஸஃலபா. படைத்த அல்லாஹ்வே அவர்களின் சொல்லைக் கேட்டான்.இந்த உமர் கேட்க மாட்டாரா என்று கூறினார்கள்.

இந்த வரலாற்றில் நாம் படிப்பனை பெறுவதற்கு பல விஷயங்கள் உண்டு.  

உலகில் இஸ்லாத்தைப் பற்றி பல்வேறு வகையில் விமர்சிக்கக் கூடியவர்கள், அவர்கள் சொல்லும் முக்கியமான காரணங்களில் ஒன்று, இஸ்லாம் பெண்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை, வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களை அடக்கி வைத்துள்ளது, சமூகத்தில் அவர்களுக்கு எந்த அந்தஸ்தையும் வழங்க வில்லை என்றும் பரவலாக பேசப்படுகிறது.இது அப்பட்டமான பொய் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அல்லாஹ் அருளிய அற்புத வேதமாம் அல்குர்ஆன் ஷரீஃபும்,அண்ணல் நபி ஸல் அவர்களின் மணிமொழிகளும் பெண்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான மனித உரிமைகளை முழுமையாக வழங்கியுள்ளது மட்டுமல்ல அவர்களுக்கு சமூக அரங்கில் மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இந்த விஷயத்தின் கனத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.பெண்களின் நிலை பற்றி உலகம் கொண்டிருந்த கருத்து என்ன? என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப காலமாகவே இந்த உலகம் பெண்களை அவர்களும் மனிதர்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த பிறகு கி.பி. 586 -ல் ஃபிரான்ஸில் பெண்களின் அந்தஸ்து பற்றி தீர்மானிக்க கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அதிகமான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் பெண்ணும் மனித இனம் தான். ஆனால் ஆண்களுக்கு உழியம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.

இதற்கு முன்னதாக ரோமானியர்கள், பெண்களை ஒரு அசுத்த பிராணி என்றனர்.

சீனர்கள், பெண்களுக்கு ஆன்மா இல்லை என்றனர்.

கணவன் மனைவியை கொன்றால் குற்றமில்லை.

பொதுவாக தந்தைக்கு தன் மகளை கொல்லக்கூடிய உரிமை இருந்தது,
அரபு நாட்டில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பயங்கரம் நடைமுறையில் இருந்தது. இது தந்தையின் கௌரவமாக கருதப்பட்டது.

இதல்லாமல் ஒரு கணவர் இறந்து விட்டால், அவரது உடமைகளை வாரிசுகளுக்கு பங்கிடும் போது அவர் விட்டுச் சென்ற சொத்துப் பட்டியலில் அவருடைய மனைவிமார்களும் இடம்பெற்றிருப்பர். இந்த வகையில்,அந்த அபலைகள் கூறு போட்டு கபளிகரம் செய்யப்படுவர்.
இன்னும் சிலர்,பெண்ணை யார் கொலை செய்தாலும் அது குற்றச்செயல் அல்ல என்றனர்.

இந்தியாவில் கணவர் இறந்த விட்டால், அவரது பிணத்தோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு உடன் கட்டை ஏற்றி தீயினால் பொசுக்கும் பொல்லாத பாவம் புனிதமாக கருதப்பட்டது.

இந்தப் பின்னனியில் தான் இஸ்லாம் பெண்களுக்கு மனித அந்தஸ்து மட்டுமல்ல, அவர்களை ஆண்களுக்கு சரிநிகர் சமானம் என்று சமத்துவம் பேசி, அவர்களுக்குத் தேவையான வாழ்வியல் உரிமைகள் அனைத்தையும் வழங்கியது. அரசியல்,குடும்பவியல்,மாத்திரமல்ல ஆன்மீகத்திலும் கூட அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானம் இஸ்லாத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதற்கு மேல்கூறப்பட்ட வரலாறு மிகச்சிறந்த சான்று.

அல்லாஹ்வின் சட்டம் மிக உறுதியானது.உலகத்தின் சூழ்நிலைக்காக மக்களின் வசதிக்காக அவ்வப்போது மாற்றப்படும் இந்த உலக சட்டங்களைப் போன்று பலகீனமாதல்ல.ஆனால் அந்த வல்ல அல்லாஹ்வின் சட்டத்தையே தன் பிரார்த்தனையின் ஒரு பெண்மனி மாற்றிக் காட்டினார்கள் என்றால் இந்த இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஒரு வரலாறு மட்டுமல்ல. இன்னும் பல செய்திகள் உண்டு.

கிருஸ்தவ மதத்தில் பெண்கள் மத குருமார்களாக முடியாது.ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் ராபியத்துல் பஸரிய்யா,நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா போன்ற பெண் ஞானிகள் ஹஸன் பஸரி,இமாம் ஷாஃபி போன்ற ஞான மேதைகளுக்கு பல ஞான உபதேசங்களை வழங்கி வழிகாட்டி யிருக்கிறார்கள். அன்னை ஆயிஷா ரலி அவர்கள் நபித்தோழர்களுக்கு மார்க்க ஞானத்தை வழங்கும் ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்களும் இந்த {ஹமைரா சின்ன சிவந்த பெண்மனியான ஆயிஷாவிடம் மார்க்கத்தின் மூன்றில் இரண்டு பகுதி ஞானத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டதின் மூலம் அன்னை அவர்களுக்கு ஸனதை கல்விச் சான்றிதலையும் வழங்கியிருக்கிறார்கள்.

பெண்களை மற்ற மதத்தவர்கள் ஆன்மீகத்தில் தள்ளி வைத்தனர். அவர்கள் ஆன்மீகத்திற்கு ஆகாதவர்கள்.மட்டமல்ல,அவர்களோடு இருந்தால் நம்மையும் ஆகாதவர்களாக, அவர்களோடு சேர்ந்தால் நம்மையும் சேராதவர்களாக ஆக்கி விடுவார்கள் என்றும் கருதினார்கள்.

ஆனால் இஸ்லாம் இந்த விஷயத்திலும் அவர்களை அரவணைத்தது. பெண்களால் அல்லாஹ்வை அடையவும்,ஆண்களை அடைய வைக்கவும் முடியும். மெஞ்ஞானம் பெற சன்னியாசம் அல்ல.சம்சாரமே அதற்கான சிறந்த வழி என்ற புறட்சிகரமான சிந்தனையை இஸ்லாம் இந்த மண்ணிற்குச் சொன்னது.

நான் ஆயிஷாவின் (ரலி) படுக்கை விரிப்பில் உடன் இருக்கையில் எனக்கு வஹி வேத வெளிப்பாடு வந்திருக்கிறதுஎன்ற நபிகளாரின் அறிவிப்பு அர்த்தமுள்ளதும், அழகானதும், ஆழமானதுமாகும்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் நெஞ்சில் சாய்ந்து, சேர்ந்திருக்கும் போதுதான் நபி ஸல் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். பெண்கள் தான் நாம் இவ்வுலகிற்கு வருவதற்கான வாசலாக இருந்தார்கள்.அதே பெண்கள் தான் அல்லாஹ்வை அடைவதற்கும், ஆன்மீகத்தில் நுழைவதற்கும் வாசலாக இருக்கிறார்கள் என்பதைத் தான் மெஞ்ஞானத் தூதரின் இறுதிப்பயணம் நமக்கு சொல்லும் செய்தியாகும்.


இப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சமத்துவத்துவத்தையும், மகத்துவத்தையும் வழங்கிய இஸ்லாம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை,வாரிசுரிமை, கணவரிடமிருந்து விவாகரத்து பெரும் உரிமை,மறுமணம் புரியும் உரிமை,கல்வி கற்கும் உரிமை, சம்பாத்தியம் செய்யும் உரிமை,மஹர் பெரும் உரிமை, இப்படி வாழ்வியலின் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்கியது.

தராவீஹ் 22 ம் நாள்


يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا                  
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். {49 ; 13}

Sunday, May 28, 2017

தராவீஹ் 21 ம் நாள்



إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا (8) لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
{நபியே!} நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் சுபச்செய்தி சொல்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம்.

தராவீஹ் 12 ம் நாள்




 وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்றும் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்ய வேண்டும் என்றும் உமது இறைவன் கட்டளையிட்டு விடடான். {17 ; 23}

தராவீஹ் இருபத்தைந்தாம் நாள்



يَا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ (3) وَثِيَابَكَ فَطَهِّر (4) وَالرُّجْزَ فَاهْجُرْ (5)
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்திருந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனை பெருமைப் படுத்துவீராக! உங்கள் ஆடையை தூய்மைப் படுத்திக் கொள்வீராக! அசுதத்தை வெறுப்பீராக!  {74 ; 1,2,3,4,5}

Friday, May 26, 2017

தராவீஹ் இருபதாம் நாள்



வல்லோன் அல்லாஹ் இந்த உலகில் அவன் விரும்பியதை படைத்துள்ளான்.அவனுடைய படைப்புகளில் ஒன்றை விட ஒன்றை அவன் சிறப்பித்திருக்கின்றான்.அவனுடைய தூதுப் பணிக்கு மனிதர்களில் இறைத்தூதர்களை தேர்வு செய்தான்.

Thursday, May 25, 2017

{5} நமது தொழுகைகள் முழுமை பெற வேண்டுமா ?



استغفرالله العظيم استغفرالله العظيم استغفرالله العظيم
من كل ذنب وخطيئة واتوب اليه واسأله التوبة
அஸ்தக்ஃபிருல்லாஹல் அளீம் மின் குல்லி தன்பின் வகதீஅத்தின் வஅதூபு இலைஹி வஅஸ்அலுஹுத் தவ்பா.

{4} பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா ?



لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ    
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர்

{3} அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டுமா ?



رَضِيْتُ بِاللٰهِ رَبًّا وَّبِالْإِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
ரளீத்து பில்லாஹி ரப்பவ் வபில் இஸ்லாமி தீனவ் வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நபிய்யா.

{2} கவலைகள் மற்றும் கடன் சுமைகள் நீங்க வேண்டுமா ?


اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِوَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஜனி, வஅவூது பிக மினல் அஜ்ஸி வல் கஸலி, வஅவூது பிக மினல் ஜுப்னி வல் புஹ்லி, வஅவூது பிக மின் கலபதித்தைனி வ கஹ்ரிர் ரிஜால்.

{1} ஏழு பாக்கியங்கள் வேண்டுமா ?


لا إله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير.
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து பியதிஹில் கைரு யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.

தராவீஹ் ஏழாம் நாள்



قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ
நான் உணக்கு {ஆதமுக்கு ஸஜ்தா செய்யும்படி} ஏவிய போது  ஸஜ்தா செய்வதை விட்டும் உன்னை எது தடுத்தது ? என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு இப்லீஸ், நான் அவரை விட சிறந்தவன் ; என்னை நெருப் பிலிருந்து படைத்தாய்.அவரை களிமண்ணிலிருந்து படைத்தாய் என்று கூறினான். {7 ; 12}

Wednesday, May 24, 2017

தராவீஹ் பத்தொன்பதாம் நாள்



ரமலான் மாதத்தின் மிக முக்கியமான பகுதி அதன் கடைசிப்பகுதி.அதில் தான் 1000 மாதங்களை விட மிகச்சிறந்த இரவு என்று குர்ஆன் வர்ணித்திருக்கிற லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது.அதனை அடைந்து கொள்வதற்காகத்தான் இந்த நாட்களுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.

தராவீஹ் பத்தாம் நாள்



إن الحسنات يذهبن السيئات )
நிச்சயமாக நன்மைகள் தீமைகளை அழித்து விடும் {11 ; 114}
இவ்வுலகில் மிக தீர்க்கமான வழிகாட்டுதல்கள்,மிக உயர்ந்த நெறிமுறைகள் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கம் சத்திய தீனுல் இஸ்லாம் தான்.

ரமலானும் நாமும்



புனிதனம் நிறைந்த பாக்கியம் பொருந்திய அருள் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த மாதம் கிடைக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள், நம்மையும் துஆ செய்யும் படி தூண்டிய மாதம்.

Tuesday, May 23, 2017

தராவீஹ் ஒன்பதாம் நாள்



   أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (62) الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63) لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.(அல்குர்ஆன் : 10:62,63,64)

தராவீஹ் எட்டாம் நாள்




اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் நிர்வாகம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகை யவர்கள் தான் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். (அல்குர்ஆன் : 9:18)

தராவீஹ் ஆறாம் நாள்



وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌  وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ اَفَلَا تَعْقِلُوْنَ
 
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தி யுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் : 6:32)

Sunday, May 21, 2017

நோன்பின் பலன்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் புனிதம் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்.

Saturday, May 20, 2017

தராவீஹ் ஐந்தாம் நாள்


(وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَاب ِ(2) سورة المائدة 
நன்மையான காரியத்திலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.பாவமான காரியத்திலும் அநியாயத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். {6 ; 2}

Friday, May 19, 2017

ரமலானும் ஆரோக்கியமும்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் புனிதம் நிறைந்த ரமலான் மாதம் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு சில தினங்களில் ரமலான் மாதத்தை அடைய இருக்கிறோம்.பாக்கியம் நிறைந்த அந்த ரமலான் மாதத்தை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவானாக! ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் உடல் தெம்போடும் கடந்த வருடங்களை விட நிறைவாக அதிகமாக அமல்கள் செய்து அல்லாஹ்வின் திருப்தியையும் உயர்ந்த அந்தஸ்து களையும் பெறுவதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக!

அல்லாஹுத்தஆலா நமக்கு ஏற்படுத்தியிருக்கிற கட்டளை கள்தொழுகை, நோன்பு,ஜகாத்,ஹஜ் இதுமாதிரி மனிதர்கள் கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கிற எந்தக் கடமையாக இருந்தாலும் - அது சின்ன விஷயமா இருந்தாலும் சரி, பெரிய காரியமாக இருந்தாலும் சரி அது வெறும் வணக்கமாக மட்டும் இல்லாது செய்யக் கூடிய மக்களுக்கு அதில் நிறைய பிரயோஜனங்களும், நன்மைகளும் இருப்பதை நாம் பாக்கலாம்.  

உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இஸ்லாத்தின் கடமைகளை ஆய்வு செய்து பார்த்த அறிவியல் மேதைகள், மருத்துவ நிபுணர்கள் எல்லோருமே இஸ்லாத்தில் இருக்கக்கூடிய எல்லா கடமைகளுமே மனித சமுதாயத்திற்கு நன்மையாகத் தான் இருக்கிறது, அதில் ஆரோக்கியம் கிடைக்கிறது, அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் நாம் வைக்க இருக்கிற இந்த நோன்பிலும் நிறைய நன்மைகளும் பயன்களும் இருக்கிறது.அதைத்தான் நாம் இன்றைக்கு அலச இருக்கிறோம்.

இன்றைக்கு நாம் அனைவருமே ஆரோக்கியத்தை நோயின்றி சுகமாக வாழ்வதை விரும்புகிறோம். ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.ஆரோக்கியம் இருந்தால் நாம் வாழ்வை அனுபவிக்க முடியும்.ஆரோக்கியம் இல்லாமல் 100 வருடம் வாழ்ந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை.இஸ்லாமும் அந்த ஆரோக்கியத்தைத் தான் அதிகம் கேட்கும் படி சொல்கிறது.
أن رجلاً جاء إلى النبيِّ صلى الله عليه وسلم فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ قال : سَل ربَّك العافيةَوالمعافاةَ في الدنيا والآخرةِ , ثم أتاهُ في اليومِ الثاني ، فقال : يا رسولَ اللهِ أيُّ الدعاءِ أفضلُ ؟ فقال له مثلَ ذلكَ ، ثم أتاهُ في اليومِ الثالثِ ، فقال له مثلَ ذلكَ ، قال : فإذا أُعْطِيتَ العافيةَ في الدنيا ، وأُعْطِيتَها في الآخرةِ فقد أفلَحتَ.
الراوي: أنس بن مالك المحدث: الترمذي - المصدر: سنن الترمذي - الصفحة أو الرقم: 3512
நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் [அல்லாஹ்விடம் கேட்பதற்கு] எந்தப் பிரார்த்தனை சிறந்தது? எனக்கேட்டு ஒருவர் வந்தார். அவருக்கு அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; இம்மையிலும்,மறுமையிலும் உனக்கு சுகம் கிடைக்க உனது இறைவனிடம் பிரார்த்தனை செய் என்றார்கள்.அவர் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் வந்து இதே கேள்வியைக் கேட்ட போதும் இதே பதிலைத்தான் திரும்பத் திரும்ப அவருக்கு அண்ணலார் [ஸல்] அவர்கள் கூறி உனக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம் வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய் என்று சொன்னார்கள். [திர்மிதி ; 3512]

ஆரோக்கியம் தான் வெற்றிக்கான முதற்படி என்று சொல்கிறார்கள்.ஆனால் இன்றைக்கு நம்மிடத்தில் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நம்ம வீட்டுல எது இருக்குதோ இல்லையோ மருந்து மாத்திரைகள் கண்டிப்பா இருக்கும்.நம்மில் அத்தனை பேர் வீட்டிலும் மினி மெடிக்கல் ஷாப பே இருக்கிறது. அந்தளவு நோய் நொடிகளின் பிடியில் நாம் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இஸ்லாம்  ஆரோக்கியம் குறித்து சொல்லியிருக்கிற ஒரே ஒரு அறிவுரை நாம் விட்டு விட்டோம்.அதனால் நாம் இன்றைக்கு நோயினால் சீரழிந்து கொண்டிருக்கிறோம்.

கொசுவை ஒழிப்பதை விட அந்தக் கொசுக்களை உற்பத்தியாக்கும் கழிவு நீரையும் அழிப்பது தான் புத்திசாலித்தனம்.இன்றைக்கு மருத்துவ உலகம் நோய் நொடிகளை அழிக்க மருந்துகளைத் தருகிறது.ஆனால் இஸ்லாம் அந்த நோய்களை உற்பத்தியாக்கும் காரணங்களைக் கண்டறிந்து அதை கலைவதற்கு அறிவுரைகளை வழங்குகிறது.

இன்றைக்குள்ள எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கட்டுப்பாடில்லாத உணவு முறை தான். வாழ்வதற்காக உண்ண வேண்டும்.ஆனால் இன்றைக்கு நாம் உண்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தளவு உணவு முறைகளில் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் யோய் விட்டது. அது தான் இத்தனை நோய்களுக்கும் காரணம்.

இஸ்லாம் அந்த உணவுக் கட்டுப்பாட்டை நமக்கு வழியுறுத்துகிறது.

நாம் எந்தளவு உணவை குறைந்துக் கொள்கிறோமோ அந்தளவு நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.உணவு கூட கூட நோய்களும் அதிகமாகிக் கொண்டே போகும். அதனால் தான் இஸ்லாம் பசியை   வலியுறுத்துகிறது, அதிகம் பசியோடு இருப்பதை சிறந்த பண்பு என்று சித்திரிக்கிறது.
"جاهدوا أنفسكم بالجوع والعطش فإن الأجر في ذلك كأجر المجاهد في سبيل الله وأنه ليس من عمل أحب إلى الله من جوع وعطش
وقيل يا رسول الله أي الناس أفضل? قال "من قل مطعمه وضحكه ورضي مما يستر به عورته
உலகம் முறையாக இயங்குவதற்கு அடிப்படைக் காரணம் என்ன ?எதை அடிப்படையாக வைத்து உலகம் இயங்குகிறது என்று ஆய்வு செய்யப்பட்டது.
எனவே உணவைக் குறைத்துக் கொண்டு அதிகம் பசியாக இருப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகளும் பயன்களும் அதிகம்.இந்த அடிப்படையில் நாம் சிந்தித்தால் நோன்பில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
صوموا تصحوا
إن الله تبارك وتعالى أوحى إلى نبي من بني إسرائيل أن أخبر قومك
நோன்பில் அப்படி என்ன ஆரோக்கியம் இருக்கிறது? நோன்பிற்கும் உடல் சுகத்திற்கும் அப்படி என்ன தொடர்பு? இருக்கிறது என்று நாம் யோசித்தால் இன்றைக்கு உள்ள அறிவியல் நிபுணர்களும், மருத்துவ நிபுணர்களும் நமக்கு பல்வேறு சுவையான செய்திகளை சொல்லித் தருகிறார்கள்.
30 நாள் தொடர்ந்து நோன்பு வைத்தால் உடல் பலகீனமாகி விடும்,உடலில் சத்து குறைந்து விடும் என்று இன்றைக்கு சிலர் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உணவில்லாமல், சாப்பிடாமல் இறந்து  போனவர்களை விட அதிகமாக அளவுக்கு அதிகமாக,வயிறு புடைக்க  சாப்பிட்டு இறந்தவர்கள் தான் அதிகம் என்று இன்றைய புள்ளி விபரம் சொல்கிறது.
நோன்பு வைப்பதால் உடல் வலிமை அதிகமாகிறது, உடலில் ஒரு விதமான  தெம்பு ஏற்படுகிறது என்றெல்லாம் மார்க் குலிஸ் என்ற ஆசிரியர் சொல்கிறார்.
அமெரிக்காவில உள்ள  டாக்டர் S.N.M ஹாஸ் சொல்வதைப் பாருங்கள் ;
நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மட்டுமல்ல ரொம்ப தொன்மையான, பழமையான நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோய்வாய் பட்டு, உடல் ரொம்ப பலகீனமாகி விட்டது. அந்த நேரத்தில் ஒரு சில தினங்களாக சாப்பிடாமல் என் வயிற்றை காலியாக்கினேன்.அதற்குப் பின்னால் தான் என் உடம்புக்கு ஒரு தெம்பு கிடைத்தது. நோன்பு வைப்பதினால் ஏதோ புதிய சக்தி உடலில் பாய்வதை நான் உணர்ந்தேன். உடலில் என்றைக்கும் இல்லாத அளவு ஒரு உத்வேகம் கிடைப்பதை நான் உணர்ந்தேன். எனவே பல நோய்களை தடுப்பதற்கும், உடல் பலகீனமானவர்கள் உடல் தேறுவதற்கும் நோன்பு தான் சிறந்த தீர்வு  என்று நான் கண்டு பிடித்தேன் என்று சொல்கிறார்.
ஒரு நாள் நோன்பு வைப்பது மூன்று வாரம் தொடர்ந்து மருத்து சாப்பிடுவதற்குச் சமம் என்பது மருத்துவத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய இப்னு சீனா அவர்களின் கருத்து.
அதுமட்டுமில்லாமல் யார் என்றைக்கும் இளமையோடு இருப்பதற்கு  விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதற்கான சிறந்த வழிமுறை நோன்பு தான் என்று சைல்டு என்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.
 கொஞ்சம் புழுக்களை வைத்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார் ;சில புழுக்களுக்கு அவை என்னென்ன விரும்பி சாப்பிடுமோ அந்த எல்லா உணவையும் கொடுத்தார். ஒரு நேரம் விடாமல் ஒவ்வொரு நேரமும் அவைகளுக்குத் தீனி போட்டார். இன்னும் சில புழுக்களுக்கு ஒரு நேரம் உணவு கொடுத்து அடுத்த நேரம் பட்டினி போட்டார். அதாவது ஒரு நேரம் உணவு.ஒரு நேரம் பட்டினி, இப்படியே வளர்த்தார். எந்த புழுக்களுக்கு அதிகமாக தீனி போட்டு,எல்லா நேரமும் தீனி போட்டு வளர்த்தாரோ அந்த புழுக்கள் அனைத்தும் சீக்கிரமே இறந்து விட்டது. எந்த புழுக்களுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அரை தீனி போட்டு ஒரு நேரம் உணவு ஒரு நேரம் பட்டினி என்று வளர்த்தாரோ அந்த புழுக்கள் தான் அதிக நாள் உயிர் வாழந்தது.
அந்த ஆராய்ச்சிக்குப் பிறகு தான் பாதி நேரம் சாப்பிட்டு பாதி நேரம் வயிற்றை காலியாக போடும் நோன்பு, மனிதனுக்கு இளமையை தருகிறது என்று கண்டு பிடித்து இந்த உண்மையை உலகத்திற்குச் சொன்னதாக நாம் கேள்விப் படுகிறோம்.
நமது உடல் சரியாக இயங்குவதற்கு நம் உடம்பில் உஷ்ணம் சரியாக இருக்க வேண்டும்.உஷ்ணம் அதிகாவும் இருக்கக்கூடாது. குறைவாகவும் இருக்கக் கூடாது.அதிகமாக இருந்தாலும் ஆபத்து. குறைவாக இருந்தாலும் ஆபத்து. ஆனால் இன்றைக்கு அப்படியா இருக்கிறது? ஒன்று  ரொம்ப அதிகமாகி விடுகிறது. அல்லது ரொம்ப குறைவாக ஆகி விடுகிறது.ஆனால் நோன்பு வைப்பதினால் அதிகப்படியான உடல் வெப்பம் குறைந்து உஷ்ணம் சமநிலைக்கு வருகிறது என்பதும் இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது.
இதை அன்றைக்கே நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
இந்த ஹதீஸை கொஞ்சம் நாம் ஆய்வு செய்து பார்த்தால் நபி [ஸல்] அவர்கள் எந்த அளவு தூர நோக்கு சிந்தனையோடும், நோன்பில் ஏற்படும் மருத்துவம் குறித்தும் பேசியிருப்பார்கள் என்று நாம் புரிந்து காள்ள முடியும்.
பொருள் வசதி உள்ளவர்கள் திருமணம் முடியுங்கள்.பொருள் வசதி  இல்லாதவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று சொல்ல காரணம் என்ன? வாலிபப் பருவம் என்பது, இணையைத் தேடுகிற பருவம். குறிப்பிட்ட வயது வந்து விட்டால் திருமணம் செய்து வைக்க வேண்டும்.அந்த திருமணம் அவனுக்கு ஒழுக்கத்தைக் கொடுக்கும். குறிப்பிட்ட வயது வந்த பிறகும் திருமணம் முடிக்காமல் இருந்தால் அவன் தவறான பாதையில் போய் விடுவான். அதனால் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
திருமணம் என்றால் இஸ்லாமிய சட்டப்படி அதற்கு உடல் தகுதி மட்டும் போதாது.பொருளாதார தகுதியும் இருக்க வேண்டும்.பொருள் தகுதியும், உடல் தகுதியும் இருப்பவன் தான் திருமணம் செய்ய முடியும்.
ஆனால் ஒருவனுக்கு உடல் தகுதி இருக்கிறது.ஆனால் பொருள் தகுதி இல்லை. பொருள் தகுதி இல்லையென்றால் திருமணம் முடிக்க முடியாது. இந்த வயதுல திருமணம் முடிக்க வில்லை யென்றால் தவறான காரியத்திலும் போய் விடுவான்.
இப்ப என்ன செய்வது ? என்று யோசிக்கும் போது அதற்குத் தான் பதில் தருகிறார்கள் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் ;- பொருள் தகுதி இல்லையென்றால் நீங்கள் நோன்பு வைத்துக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கு கேடயமாக இருக்கும் என்று சொல்லி, நோன்பு மனித உடம்பில் உஷ்ணத்தை கட்டுப் படுத்துகிறது என்ற அறிவியல் உண்மையை அழகாக சொல்லி விட்டார்கள் நபி [ஸல்] அவர்கள்.
இப்படி பல்வேறு பலன்களை நோன்பு தருவதினால் தான்  {FASTING IS A BEST MADECINE}  உண்மையான நோன்பு ஒரு சிறந்த மருத்துவம் என்று எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள்.